என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆரணியில் கூடுதல் விலைக்கு விற்றதால் கியாஸ் சிலிண்டர் லாரியை சிறைபிடித்து போராட்டம்
ஆரணி:
ஆரணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர், அங்குள்ள தனியார் ஏஜென்சி மூலம் கியாஸ் சிலிண்டர் பெறுகின்றனர். ஒரு கியாஸ் சிலிண்டர் 718 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. இது அரசு நிர்ணயித்த விலை.
ஆனால், ஆரணியில் உள்ள ஏஜென்சி ஊழியர்கள் ஒரு கியாஸ் சிலிண்டரை ரூ.740 முதல் ரூ.750 வரை விற்கின்றனர். இதுகுறித்து கேட்கும் பொதுமக்களுக்கு கியாஸ் சிலிண்டரை தாமதப்படுத்தி வழங்குகின்றனர்.
கியாஸ் ஏஜென்சியின் இது போன்ற தவறான அணுகு முறையை கண்டித்து, இன்று காலை ஆரணி அடுத்துள்ள அக்ராபாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், கியாஸ் சிலிண்டர் ஏற்றிவந்த லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் விலைக்கு கியாஸ் சிலிண்டரை விற்க கூடாது என வலியுறுத்தினர். அதன் பிறகு, ஏஜென்சி மேலாளர் போன் மூலம் கிராமத்தில் உள்ள பிரமுகர்களிடம் பேசி, 718 ரூபாய் கொடுத்தே சிலிண்டர் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
அதன்பிறகு, லாரியை பொதுமக்கள் விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்