search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியாஸ் சிலிண்டர்"

    • மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா- திரணாமுல் காங்கிரஸ்க்கு இடையில் நேரடி போட்டி.
    • பல்வேறு விவகாரங்களில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறது பா.ஜனதா.

    மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தல் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.1,500 அல்லது ரூ.2 ஆயிரமாக உயர்த்தும். நாம் சமையல் செய்வதற்கு விறகு சேகரிக்கும் பழைய நடைமுறைக்கு மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம்.

    ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்துக்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். அவர்கள் கட்டித்தரவில்லை என்றால் மே மாதத்திலிருந்து மாநில அரசே அந்த வீடுகளை கட்டத் தொடங்கும்.

    ஒரு இளைஞரிடம் 100 நாள் வேலை திட்டத்துக்கான பணம் கிடைத்ததா? என்று கேட்டேன். சுமார் ₹30,000 கிடைத்ததாக கூறினார். இவரைப் போன்றவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்காமல் இருந்த தொகை இதுவாகும். 59 லட்சம் பேருக்கு நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளோம்

    இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

    ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 11 லட்சம் வீடுகள் கட்டுக்கொடுக்க இருக்கிறது. இருப்பினும், சந்தேஷ்காளி பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷாஜகான் ஷேக் நேற்று கைது செய்யப்பட்டது குறித்து மம்தா பானர்ஜி எந்த கருத்தும் கூறவில்லை.

    • உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைப்பு.
    • புத்தாண்டு முதல் விலை குறைப்பு அமலுக்கு வரவிருக்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைத்து இருக்கும் பா.ஜ.க. அரசு கியாஸ் சிலிண்டர்கள் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை குறைப்பதாக பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது.

    அந்த வகையில், ஜனவரி 1-ம் தேதி முதல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்கள் ரூ. 450-க்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது பேசிய முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா, மானிய தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவித்து இருக்கிறார். 

    • தெலுங்கானாவில் 1.20 கோடி கியாஸ் இணைப்புகள் உள்ளன.
    • ஆண்கள் பெயரில் உள்ள இணைப்புகள் பெண்கள் பெயரில் மாற்ற கியாஸ் ஏஜென்சி அலுவலகம் முன்பாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    தெலுங்கானாவில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ரூ.500-க்கு சமையல் கியாஸ் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.

    அதன்படி வருகிற 28-ந்தேதி காங்கிரஸ் தோற்றுவித்த நாளை முன்னிட்டு தெலுங்கானாவில் பெண்கள் பெயரில் உள்ள கியாஸ் இணைப்புகளுக்கு மகாலட்சுமி என்ற புதிய திட்டத்தில் ரூ.500 மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது.

    தெலுங்கானாவில் 1.20 கோடி கியாஸ் இணைப்புகள் உள்ளன.

    பெண்கள் பெயரில் கியாஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் மானிய விலையில் வழங்கப்படும் என தெரியவந்ததால் ஆண்கள் பெயரில் உள்ள இணைப்புகள் பெண்கள் பெயரில் மாற்ற கியாஸ் ஏஜென்சி அலுவலகம் முன்பாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    • 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • சங்கர், முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள பொங்குபாளையம் கிராமம் அய்யம்பாளையம் கோல்டன் அவென்யூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுரேஷ் ( வயது 52). சம்பவத்தன்று இவர் காலையில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த சுரேஷ், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.

    உடனே இதுகுறித்து சுரேஷ், பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கேமராவில் 3 பேரின் உருவம் பதிவாகி இருந்தது.

    அவர்கள் யாரென்று விசாரணை நடத்திய போது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் (42), மற்றும் திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியை சேர்ந்த முரளி (வயது 27) , நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த மணிமாறன் (35) என்பது தெரியவந்தது. 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கைதான மணிமாறன் பொங்குபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீடு வீடாக சென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது இவர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை கண்காணித்துள்ளார். திருடுவதற்கு ஏற்றவாறு எந்த வீடுகள் பூட்டப்பட்டு இருக்கிறது. அதன் அருகில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என நோட்டமிட்டு தனது கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி சங்கர், முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இந்த குற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த மணிமாறனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும்.
    • ரூ.400 விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 30-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சித் தலைவரும், முதல் மந்திரியுமான சந்திரசேகர ராவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400 விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். மீதி தொகையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும். அதற்கான பிரீமியம் தொகையை மாநில அரசு செலுத்திவிடும்.

    'ஆரோக்கிய ஸ்ரீ' திட்டத்தின்கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும்.

    சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ரூ.2,016 மாதாந்திர தொகை, 5 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். முதல் ஆண்டிலேயே ரூ.3,016 ஆக அதிகரிக்கப்படும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.4 ஆயிரத்து 16-ல் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரத்து 16 ஆக உயர்த்தப்படும்.

    விவசாயிகளுக்கான முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை 5 ஆண்டுகளில் படிப்படியாக ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    நிச்சயமாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம். ஆட்சிக்கு வந்த 6 முதல் 7 மாதங்களிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தனிநபர் வருமானம், மின்சார பயன்பாடு ஆகியவற்றில் தெலுங்கானா முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.

    • மேற்கூரை கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருபவர் பழனியம்மாள் (54), இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்டார். இவருக்கு பிள்ளைகளும் இல்லை.
    • வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டினுள் இருந்து கரும்புகை வெளியேறியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கொம்பாடிப்பட்டி மாரியம்மன் கோவில் எதிரில் தகர மேற்கூரை கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருபவர் பழனியம்மாள் (54), இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்டார். இவருக்கு பிள்ளைகளும் இல்லை.

    கூலி வேலை செய்து தனியாக வசித்து வந்தார். நேற்று பழனியம்மாள் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டினுள் இருந்து கரும்புகை வெளியேறியது.

    இதனை பார்த்த அந்த பகுதியினர் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உ டனே அங்கு விரைந்து சென்ற நிலைய அதிகாரி உதயகுமார் தலைமையிலான வீரர்கள் தீயை அக்கம் பக்கம் பரவவிடாமல் தடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

    இது குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்திய போது, பழனியம்மாள் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி விட்டு அணைக்காமல் வீட்டை பூட்டி விட்டு சென்ற நிலையில் நீண்ட நேரம் எரிந்த அடுப்பு வெப்பம் தாங்காமல் ரப்பர் குழாய் வழியாக தீ பரவி சிலிண்டருக்கு சென்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் எரிந்து சாம்பலானது.

    பாதிக்கப்பட்ட பழனியம்மாளுக்கு வருவாய்துறை சார்பில் புடவை, அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் நிவாரணமாக வழங்கப்பட்டது. 

    • தீ மளமளவென பற்றி கொண்டதால், அந்த டீக்கடை எரிந்து தீக்கிரையானது.
    • டீக்கடை தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் போச்சம்பள்ளி பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் டீக்கடை, செருப்பு கடை, இனிப்பு தயார் செய்யும் கடை, சலூன் கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது60) என்பவர் பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தார்.

    இன்று காலை வாரசந்தை கூடும் என்பதால், நேற்று பஸ்நிலையத்தில் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்த வண்ணமாக இருந்ததால், அப்பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் முருகேசன் டீக்கடையில் திடீரென்று கியாஸ் சிலிண்டர் காலியானதால், வேறு சிலிண்டரை எடுத்து வந்து கியாஸ் அடுப்பில் பொருத்தினார். அப்போது திடீரென்று அதில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. உடனே முருகேசன் மற்றும் கடையில் டீக்குடித்து கொண்டு இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    அதற்குள் தீ மளமளவென பற்றி கொண்டதால், அந்த டீக்கடை எரிந்து தீக்கிரையானது. உடனே அங்கிருந்தவர்கள் உடனே போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டீக்கடையில் பற்றி கொண்ட தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டீக்கடைக்காரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் சிலிண்டர்களை வைத்து பயன்படுத்துவதால் இதுபோன்ற தீ விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள். சமூக ஆர்வலர்கள் பல முறை குற்றசாட்டியும் இது வரை எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

    எனவே, இதுபோன்ற திறந்த வெளியில் டீக்கடை, பலகரா கடை, ஓட்டல் கடை ஆகிய கடைகளில் கியாஸ் சிலிண்டர்களை பாதுகாப்பான முறையில் கையாள்வது குறித்து கடைக்காரர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    டீக்கடை தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் போச்சம்பள்ளி பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீயில் கருகி 2 சகோதரிகள் இறந்தது குறித்து சோரனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • இருவரை பெயிண்டர் தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சோரனூர் அருகே உள்ள நீலமலைக்குன்னு பகுதியை சேர்ந்த சகோதரிகள் பத்மினி (வயது74), தங்கம்(71). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. அவர்கள் இருவரும் ஒரே காம்பவுண்டில் உள்ள இரு வீடுகளில் தனித்தனியாக தனியாக வசித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று பகலில் பத்மினி தங்கியிருந்த வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. மேலும் வீட்டுக்குள் இருந்து குபுகுபுவென புகை வந்தது. அதனை கவனித்த அக்கம் பக்கத்தினர், அங்கு வந்தனர். அப்போது பத்மினியின் வீட்டுக்குள் தீப்பிடித்து எரிந்தது.

    பத்மினி மற்றும் தங்கம் ஆகிய இருவரும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அப்போது அவர்களது வீட்டுக்குள் இருந்து ஒருவர் தப்பியோட முயன்றார். அந்த நபருக்கு கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

    அவரிடம் அக்கம்பக்கத்து வீட்டினர், அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதற்கு அந்த நபர், வீட்டுக்குள் தீப்பிடித்தததை பார்த்து அதில் சிக்கியவர்களை காப்பாற்ற வந்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த நபர் மீது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து தீயில் கருகி 2 சகோதரிகள் இறந்தது குறித்து சோரனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் சகோதரிகளின் வீட்டில் சிக்கிய நபரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் பட்டாம்பி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(48) என்பது தெரியவந்தது.

    சகோதரிகளின் வீட்டுக்குள் சென்றதற்கான காரணம் குறித்து போலீசார் கேட்டபோது, தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காகவே சகோதரிகளின் வீட்டுக்குள் வந்ததாகவும், அப்போது தனக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறார். இதையடுத்து அவரை, சிகிச்சைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.

    மணிகண்டனுக்கு எங்கெல்லாம் காயம் ஏற்பட்டிருக்கிறது? என்று பார்த்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க நெக்லஸ் மற்றும் தங்க வளையல்கள் இருந்தன. அதுபற்றி போலீசாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அந்த நகைகள் தீயில் கருகி இறந்த சகோதரிகளின் நகைகள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில் மருத்துவமனையில் இருந்த மணிகண்டனிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தங்க நகைகளுக்காக வயது முதிர்ந்த சகோதரிகள் 2 பேரையும் எரித்துக்கொன்ற அதிர்ச்சி தகவலை மணிகண்டன் தெரிவித்தார்.

    மணிகண்டன் பெயிண்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரிகளின் வீட்டில் மணிகண்டன் பெயிண்டிங் வேலை பார்த்திருக்கிறார். அப்போது சகோரிகள இருவரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட அவர், அவர்களது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருகிறார்.

    ஏற்கனவே வீட்டில் பெயிண்டிங் வேலை பார்த்த பழக்கத்தின் அடிப்படையில், நேற்று மூதாட்டி பத்மினியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது பட்டப்பகலில் பத்மினி வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார். இதனால் பத்மினி சத்தம் போட்டிருக்கிறார்.

    தனது அக்காளின் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் இருந்த தங்கம் வந்திருக்கிறார். அவர் மணிகண்டனுடன் தனது அக்காள் போராடுவதை பார்த்திருக்கிறார். இருவரும் சேர்ந்து மணிகண்டனின் கொள்ளை திட்டத்தை முறியடிக்க முயன்றிருக்கிறார்.

    அப்போது மணிகண்டன், சகோதரிகள் இருவரையும் கட்டையால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சகோதரிகள் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த நகைகளை மணிகண்டன் எடுத்துக் கொண்டார்.

    சகோதரிகள் தப்பிவிட்டால் தன்னை காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்று கருதிய அவர், அவர்கள் இருவரையும் கொலைசெய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீவைத்தார். இதில் வீட்டுக்குள் குபீரென தீப்பிடித்தது.

    சகோதரிகள் இருவரின் மீதும் தீப்பிடித்தது. உடலில் தீப்பிடித்து எரிந்ததால் வலி தாங்க முடியாமல் சகோதரிகள் இருவரும் பயங்கரமாக அலறியுள்ளனர். வீட்டுக்குள் குபீரென தீப்பிடித்ததால், தீ வைத்த மணிகண்டனுக்கு முகம் மற்றும் கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் சகோதரிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால், அவர்களிடம் இருந்து மணிகண்டனால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியவில்லை. அதன்பிறகும் காப்பாற்ற வந்ததாக கூறி தப்பித்துவிடலாம் என்று மணிகண்டன் கருதி, அதனையே தெரிவித்தார்.

    ஆனால் திருடிய நகைகளை உள்ளாடைக்குள் வைத்திருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்துவிட்டதால் வசமாக சிக்கினார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தீக்காயம் இருப்பதால் போலீசாரின் கண்காணிப்பில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.

    நகைகளுக்காக வயது முதிர்ந்த சகோதரிகள் இருவரை, பெயிண்டர் தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தூக்கி வீசப்பட்டது.
    • கியாஸ்சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கியாஸ் ஏஜென்சி உள்ளது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் கியாஸ் சிலிண்டர்கள் இரும்புலியூர், கங்கை தெருவில் அமைந்து உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள காலி மைதானத்தில் இறக்கிவைத்து சிறிய வாகனங்களில் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    வழக்கம்போல் வாகனங்களில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி, இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தூக்கி வீசப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் அருகில் 20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த மற்ற கியாஸ் சிலிண்டர்கள் எதுவும் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கியாஸ்சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கியாஸ் சிலிண்டரை தரையில் இறக்கி வைத்த போது வெயிலின் தாக்கத்தில் அது வெடித்ததாக ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

    கியாஸ்சிலிண்டரை கொண்டு செல்லும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தற்சார்பு பொருளாதாரத்தை கொடுத்து பெருமையோடு வாழும் வாழ்க்கையை கொடுப்போம்.
    • தமிழகத்தில் மக்களுக்கு வருமானம் கொடுத்து அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்க முடியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தற்சார்பு பொருளாதாரம் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    தற்போது உலகம் வர்த்தக மயமாகிவிட்டது. உலக வர்த்தக அமைப்பில் பெருமுதலாளிகள், தொழில் அதிபர்கள் உள்ளனர். இவர்கள் கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, போக்குவரத்து ஆகியவற்றை சேவையாக பார்க்காமல் வர்த்தகம் செய்யும் தொழிலாக்கிவிட்டனர். தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கல் மூலமாக கல்வி, மருத்துவம், சாலை, குடிநீர் போன்றவை தனியார்வசமாகி வருகிறது.

    கேடுவிளைவிக்கும் அணுஉலை, அனல்மின்நிலையத்தை அரசு வைத்துள்ளது. ஆனால் கேடுவிளைவிக்காத காற்றாலை மின்சாரம், சூரிய ஒளிமின்சாரத்தை தனியாரிடம் கொடுத்துவிட்டனர். ஜி.எஸ்.டி. வரி மூலமாக தொழில்களை இழந்துவிட்டனர்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உணவு ஏற்றுமதி செய்யப்படும். எங்கள் ஆட்சியில் 5 ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள். தற்சார்பு பொருளாதாரத்தை கொடுத்து பெருமையோடு வாழும் வாழ்க்கையை கொடுப்போம்.

    பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் பணம் கொடுப்பதால் வறுமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. மக்களை வறுமையில் வைத்துக்கொண்டு இலவசங்களை வழங்குவது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் மக்களுக்கு வருமானம் கொடுத்து அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்க முடியும். ஆனால் ஆட்சியாளர்கள் அவ்வாறு செய்யவில்லை.

    கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 மாநிலங்களில் விரைவில் தோ்தல் வரவிருப்பதே விலை குறைப்புக்கு காரணம். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரமாக உயா்த்த ப்பட்டாலும் ஆச்சரியப்ப டுவதற்கு இல்லை.

    தமிழகத்தில் 1500 அரசுப்பள்ளிக்கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பள்ளிக்கூடங்களை கட்டிக்கொடுப்பதில் முனைப்பு காட்டுவதில்லை. தமிழகத்தில் கட்டப்படும், கட்டி முடிக்கப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் கலைஞர் கருணாநிதியின் பெயர் மட்டுமே வைக்கப்படுகிறது. காமராஜ் கல்விக்கூடங்களை திறந்து வைத்தார். தி.மு.க.வினர் மது கூடங்களை திறந்து வைத்தனர். வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை தனித்தே போட்டியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • பஞ்சாப் தேர்தலை மனதில் கொண்டு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றார்
    • 2024 மக்களவை தேர்தலில் உரிய பாடத்தை மோடி அரசுக்கு நிச்சயம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாடு முழுவதும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. ஐந்து மாநில தேர்தலை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு இந்த முடிவை அரசியல் ஆதாய நோக்கத்தில் எடுத்து உள்ளது.

    எந்தவித விவாதமும் இல்லாமல் 3 வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதை எதிர்த்து ஓராண்டு காலம் போராடிய விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்க முன்வராத கொடூரமான ஆட்சி நடத்திய பிரதமர் மோடி, பஞ்சாப் தேர்தலை மனதில் கொண்டு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றார். அதைப் போல தான் இப்போதும் விலை குறைப்பு நடந்திருக்கிறது.

    பா.ஜ.க. ஆட்சியில் 9 ஆண்டுகளில் சிலிண்டர் விலை ரூ.1118.50 ஆக கடுமையாக உயர்த்தப்பட்டது. தற்போது அதில் ரூ.200 மட்டுமே குறைத்திருப்பது யானை பசிக்கு சோளப்பொரி போட்டதாகத் தான் கருத வேண்டும்

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத வகையில் 23 சதவீதமாக உயர்ந்து உள்ளது. ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை திசைத் திருப்புகிற நோக்கத்தில் ராமர் கோவில் கட்டுவோம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 ரத்து செய்வோம், மணிப்பூர் மாநிலத்தில் வகுப்புவாத கலவரத்தை தூண்டி விடுவோம் என வெறுப்பு அரசியல் மூலம் வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி வாங்கும் சக்தியை இழந்து வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிற மக்கள் 2024 மக்களவை தேர்தலில் உரிய பாடத்தை மோடி அரசுக்கு நிச்சயம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சுமார் 100-க்கும்மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மக்கள் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் மாநகராட்சி மண்டல அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், முல்லை நகர் பகுதியில் குடியிருப்பு அருகில் உள்ள காலி இடத்தில் கோவில் அருகே தனியார் நிறுவனம் சார்பில் கியாஸ் சிலிண்டர் குடோன் வைப்பதற்கு பணிகள் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும்மேற்பட்டோர் முல்லை நகர் தலைவர் சக்திவேல், செயலாளர் பழனிச்சாமி, துணைத் தலைவர் பொண்ணம்பலம் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து குடோன் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் மாநகராட்சி மண்டல அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    ×