search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்-26-ந்தேதி நடக்கிறது
    X

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்-26-ந்தேதி நடக்கிறது

    • அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரி வாயு ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
    • கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரி வாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×