search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் சில இடங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் தாமதம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையில் சில இடங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் தாமதம்

    • சென்னையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாளில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.
    • புதிய சிலிண்டர்கள் கிடைத்த பிறகு சிலிண்டரை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாளில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சென்னையில் சில இடங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய சிலிண்டர்கள் உடனே வராததால் பொது மக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    திருவான்மியூர் பகுதியில் வழக்கமாக முன்பதிவு செய்த 3 நாட்களுக்குள் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு விடும். ஆனால் அங்கு முன்பதிவு செய்த 8 நாட்களுக்கு பிறகே சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. சில வாடிக்கையாளர்கள் கியாஸ் அலுவலகங்களுக்கே சென்று காலி சிலிண்டர்களை கொடுத்து புதிய சிலிண்டர் கேட்கிறார்கள்.

    பல வாடிக்கையாளர்கள் 2 சிலிண்டர் வைத்திருந்தாலும் கடைசி நேரத்திலேயே முன்பதிவு செய்து சிலிண்டர் கிடைக்காமல் திணறுகிறார்கள். கொரோனா தொற்று ஊரடங்கின்போது கூட சிலிண்டர் தாமதமின்றி கிடைத்தது. தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன ஆலையில் ஒரு சிலிண்டரின் அடிப்பகுதி வெடித்ததால் விபத்து ஏற்பட்டது. எனவே பழைய மற்றும் துருப்பிடித்த சிலிண்டர்கள் அகற்ற நிறுவனம் முடிவு செய்தது. பழைய சிலிண்டர்களை அகற்றிய நிலையில் அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் போதுமான அளவில் வரவில்லை. இதன் காரணமாகவே கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

    சென்னையில் தற்போது முன்பதிவு செய்து 5 நாட்களுக்கு பிறகும், மற்ற இடங்களில் 3 நாட்களுக்கு பிறகும் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. புதிய சிலிண்டர்கள் கிடைத்த பிறகு சிலிண்டரை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    Next Story
    ×