search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் - உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்
    X

    செல்லமுத்து.

    கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் - உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்

    • சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்ற வாக்குறுதி நிறைவேற்றாமல் உள்ளது.
    • ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு தற்போது கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருப்பது ஏழை எளியவர்களை கடுமையாக பாதிக்கும். கியாஸ் சிலிண்டர் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. கொரோனா காலத்திற்கு பின்னர் வேலைவாய்ப்புகள் குறைந்ததால் ஏழைகளின் குடும்ப சுமை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அத்தியாவசிய தேவைகளான சமையல் கியாஸ் விலை உயர்வு ஏழை, எளிய, மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    ஏற்கனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கியாஸ் சிலிண்டரின் விலையை குறைக்கும் வகையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கியாஸ சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும். எனவே மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கியாஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×