என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை
Byமாலை மலர்18 Feb 2018 5:00 AM GMT (Updated: 18 Feb 2018 5:00 AM GMT)
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திரும்பப்பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதையடுத்து நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
4 நாட்களுக்கு பிறகு நேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன் பிடிக்கக்கூடாது. உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று மீனவர்களை விரட்டியடித்தனர்.
இதனை தொடர்ந்து மீனவர்கள் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு புறப்பட தொடங்கினர்.
அப்போது சில படகுகளுக்குள் புகுந்த இலங்கை கடற்படையினர் அங்கிருந்த மீன்பிடி சாதனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். சில மீனவர்கள் மீது தாக்குதலும் நடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அங்கிருந்து அச்சத்துடன் இன்று காலை கரை திரும்பினர். அதன் பிறகே தாக்குதல் குறித்த சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து ராமேசுவரத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. #tamilnews
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திரும்பப்பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதையடுத்து நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
4 நாட்களுக்கு பிறகு நேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன் பிடிக்கக்கூடாது. உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று மீனவர்களை விரட்டியடித்தனர்.
இதனை தொடர்ந்து மீனவர்கள் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு புறப்பட தொடங்கினர்.
அப்போது சில படகுகளுக்குள் புகுந்த இலங்கை கடற்படையினர் அங்கிருந்த மீன்பிடி சாதனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். சில மீனவர்கள் மீது தாக்குதலும் நடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அங்கிருந்து அச்சத்துடன் இன்று காலை கரை திரும்பினர். அதன் பிறகே தாக்குதல் குறித்த சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து ராமேசுவரத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X