search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனர் தீ வைத்து எரிப்பு
    X

    அரியலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனர் தீ வைத்து எரிப்பு

    அரியலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேனர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே குறிச்சிக்குளம் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி ஒருவர் புதிதாக கட்டியுள்ள வீட்டின் புதுமனை புகுவிழா இன்று நடக்கிறது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார். இதையடுத்து அவரை வரவேற்று ஆர்.எஸ்.மாத்தூர் பஸ் நிலையம் அருகில் கட்சி நிர்வாகிகள் சார்பில் பெரிய வடிவில் பேனர் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பார்த்த போது பேனரின் கீழ் பகுதி தீயில் எரிந்து கிடந்தது. இதையறிந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு திரண்டனர். மேலும் இது குறித்து குவாகம் போலீசில் புகார் செய்தனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். பேனர் தீப்பிடித்து எரிந்தது எப்படி என்று தெரியவில்லை. யாராவது மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்து விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பேனர் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதனிடையே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கலப்பு திருமணம் செய்த வீரத்தமிழன், ஜெகதீஸ்வரி ஆகியோர் நேற்று தற்கொலை செய்து கொண்டனர். இதன் காரணமாகவும் அரியலூர் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews

    Next Story
    ×