search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுத்தேர்வில் ஜொலிக்கும் தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு காமராஜர் விருது
    X

    பொதுத்தேர்வில் ஜொலிக்கும் தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு காமராஜர் விருது

    தமிழ்வழியில் பயின்று பொதுத்தேர்வில் தேர்ச்சிபெறும் சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்வழியில் பயின்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும். மாவட்டந்தோறும் 30 மாணவர்கள் என 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.

    விருதுடன் பரிசுத்தொகையாக 10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும். அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. லேப்டாப் கிடைக்காத மாணவர்களுக்கு, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×