என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர்- ராஜேஷ் லக்கானி
Byமாலை மலர்25 Nov 2017 1:34 AM GMT (Updated: 25 Nov 2017 1:34 AM GMT)
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுவார்கள் என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 256 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் ஒரு வெளிமாநில அதிகாரி இருந்து வாக்குப்பதிவை கண்காணிப்பார். சி.ஆர்.பி.எப். படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்.
கடந்த இடைத்தேர்தலின்போது வரவழைக்கப்பட்ட அளவில் சிறப்பு பார்வையாளர்கள், துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுவார்கள். இன்னும் 3 அல்லது 4 நாட்களில் அவர்கள் வரத்தொடங்கிவிடுவார்கள்.
ஆர்.கே.நகரில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உடனடியாக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை 61 குழுக்கள் நியமிக்கப்பட்டு இருந்தது. பணப்பட்டுவாடாவைத் தடுக்க புதிய உத்தியை தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 256 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் ஒரு வெளிமாநில அதிகாரி இருந்து வாக்குப்பதிவை கண்காணிப்பார். சி.ஆர்.பி.எப். படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்.
கடந்த இடைத்தேர்தலின்போது வரவழைக்கப்பட்ட அளவில் சிறப்பு பார்வையாளர்கள், துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுவார்கள். இன்னும் 3 அல்லது 4 நாட்களில் அவர்கள் வரத்தொடங்கிவிடுவார்கள்.
ஆர்.கே.நகரில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உடனடியாக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை 61 குழுக்கள் நியமிக்கப்பட்டு இருந்தது. பணப்பட்டுவாடாவைத் தடுக்க புதிய உத்தியை தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X