என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
7 போலீசாருக்கு டெங்கு காய்ச்சல்: சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சென்னை:
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் டெங்கு பாதித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே டெங்குவால் போலீசார் பாதிக்கப்பட்டு முறையாக சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
தட்டணுக்கள் குறைவாக இருப்பவர்களுக்கு தட்டணுக்கள் ஏற்றப்படுகிறது. 3 அரசு ஆஸ்பத்திரியிலும் சுமார் நூற்றுக்கும் மேலானவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 164 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 39 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இவர்களில் 7 பேர் போலீசார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அமைச்சருடன் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்