என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நளினி 10 நாட்களுக்குள் புழல் சிறைக்கு மாற்றப்படுவார்: வக்கீல் புகழேந்தி தகவல்
Byமாலை மலர்22 Jun 2017 5:13 AM GMT (Updated: 22 Jun 2017 5:13 AM GMT)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி இன்னும் 10 நாட்களுக்குள் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார் என்று வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், பெண்கள் சிறையில் முருகனின் மனைவி நளினியும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி, தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக சிறைத்துறை தலைவருக்கு சிறை கண்காணிப்பாளர் மூலம் நளினி மனு அளித்தார்.
மேலும் பெண்கள் சிறை கண்காணிப்பாளரும், சிறையின் சில அலுவலர்களும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை துன்புறுத்துவதால் உடனடியாக புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரிடம் சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் சண்முகசுந்தரம், ராஜலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் நளினி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் நேற்று மாலை நளினியின் வக்கீல் புகழேந்தி பெண்கள் சிறையில் உள்ள நளினியை சந்தித்தார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த வக்கீல் புகழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நளினியின் கோரிக்கை மனு குறித்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார்’’ என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், பெண்கள் சிறையில் முருகனின் மனைவி நளினியும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி, தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக சிறைத்துறை தலைவருக்கு சிறை கண்காணிப்பாளர் மூலம் நளினி மனு அளித்தார்.
மேலும் பெண்கள் சிறை கண்காணிப்பாளரும், சிறையின் சில அலுவலர்களும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை துன்புறுத்துவதால் உடனடியாக புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரிடம் சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் சண்முகசுந்தரம், ராஜலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் நளினி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் நேற்று மாலை நளினியின் வக்கீல் புகழேந்தி பெண்கள் சிறையில் உள்ள நளினியை சந்தித்தார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த வக்கீல் புகழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நளினியின் கோரிக்கை மனு குறித்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X