என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவுக்கு காரில் ரேசன் அரிசி கடத்தல்: சென்னை வாலிபர் கைது
Byமாலை மலர்18 Jun 2017 9:20 AM GMT (Updated: 18 Jun 2017 9:20 AM GMT)
ஆந்திராவுக்கு காரில் ரேசன் அரிசி கடத்திய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காருடன் ரேசன் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது 14 மூட்டைகளில் ரேசன் அரிசி இருந்தது. அதனை ஆந்திராவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.
இதையடுத்து காரில் இருந்த சென்னை, பெரம்பூரை சேர்ந்த ஜான் பாட்ஷாவை கைது செய்தனர். காருடன் ரேசன் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மணல் கடத்தி வந்த 6 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.
லாரி டிரைவர் ஆந்திராவை சேர்ந்த வெங்கடேசன் உள்பட 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X