என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் இருந்து கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம்: நாராயணசாமி தகவல்
Byமாலை மலர்30 May 2017 4:17 AM GMT (Updated: 30 May 2017 4:17 AM GMT)
சென்னையில் இருந்து கடலூருக்கு ரெயில்பாதை அமைக்கும் கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம் விரைவில் தொடங்க உள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிக்கை ஒன்றை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை பெருங்குடியில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு ரெயில்பாதை அமைக்க மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு நில ஆர்ஜிதம் செய்யுமாறு தமிழக அரசை ரெயில்வே துறையும் கேட்டுக் கொண்டது.
இந்த திட்டம் கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம் ஆகும். இதுதொடர்பாக புதுவை அரசிடம் ஒப்புதல் கேட்டபோது புதுவை-கடலூர் இடையே 3 கிலோ மீட்டருக்கு ஒரு ரெயில் நிலையம் அமைக்க கேட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறி கடந்த 12-12-2016 அன்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன்.
அதன் அடிப்படையில் இதற்கு மத்திய ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான கடிதம் புதுவை அரசுக்கு வந்துள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடக்க உள்ளது.
இதற்காக நிதியும் ஒதுக்கி உள்ளனர். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய, தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுவை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிக்கை ஒன்றை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை பெருங்குடியில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு ரெயில்பாதை அமைக்க மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு நில ஆர்ஜிதம் செய்யுமாறு தமிழக அரசை ரெயில்வே துறையும் கேட்டுக் கொண்டது.
இந்த திட்டம் கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம் ஆகும். இதுதொடர்பாக புதுவை அரசிடம் ஒப்புதல் கேட்டபோது புதுவை-கடலூர் இடையே 3 கிலோ மீட்டருக்கு ஒரு ரெயில் நிலையம் அமைக்க கேட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறி கடந்த 12-12-2016 அன்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன்.
அதன் அடிப்படையில் இதற்கு மத்திய ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான கடிதம் புதுவை அரசுக்கு வந்துள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடக்க உள்ளது.
இதற்காக நிதியும் ஒதுக்கி உள்ளனர். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய, தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X