என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கங்குலி, டோனியே இந்தியாவின் சிறந்த கேப்டன்கள்- மைக்கேல் கிளார்க்
Byமாலை மலர்4 Jun 2019 10:29 AM GMT (Updated: 4 Jun 2019 10:29 AM GMT)
கோலியைக் காட்டிலும் கங்குலி மற்றும் டோனியே இந்திய அணியின் சிறந்த கேப்டன்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
லண்டன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை சவுரவ் கங்குலி மற்றும் மகேந்திரசிங் டோனியே சிறந்த கேப்டன்கள் ஆவர். விராட் கோலியை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த 50 ஒவர் கிரிக்கெட் விரர். நெருக்கடியான சூழ்நிலையிலும் அணிக்கு தேவையான ரன்களை பெற்றுக்கொடுப்பதில் கோலி முக்கிய பங்காற்றுகிறார்.
தற்போதைய கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவை விட கோலியே சிறந்த விரராக திகழ்கிறார். ஆனால் கேப்டன் என்ற முறையில் தனது தலைமை பண்புகளை அவர் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே போல் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசிர் ஹசன், விராட் கோலி குறித்து கூறுகையில், “விராட் கோலி தனது நாட்டுக்காக வெற்றியை பெற்றுத்தருவதேயே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார். கோலி, கிரிக்கெட் உலகின் கடவுள் என அனைவராலும் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X