search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்பால் கவர்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட வாட்சன்
    X

    அன்பால் கவர்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட வாட்சன்

    அன்பால் நெகிழ வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் தோல்வியடைந்தது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி வரை முயற்சித்த வாட்சன் ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.

    இந்நிலையில் ஐபிஎல் இறுதி போட்டி முடிந்த பின், வாட்சன் பற்றிய ஒரு புகைப்படம் சமூக வளைதளங்களில் பரவியது. அந்த புகைப்படத்தில் வாட்சன் ரத்த காயங்களுடன் ஆடியது தெரிய வந்தது. இதனை அனைவரும் முதலில் பொய்யான செய்தி என கிண்டல் செய்தனர். அதன் பிறகு போட்டியின் ஹைலைட்சை பார்த்து அனைத்து ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.



    இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட அணியின் வெற்றிக்காக விளையாடிய வாட்சனுக்கு சில தினங்களாக ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக வாட்சன் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் வாட்சன் கூறியதாவது:-

    கடந்த 2 நாட்களாக ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி வரை முயன்று 1 ரன்னில்தான் தோல்வியடைந்தோம். ஆனாலும் மிகவும் சிறப்பான ஆட்டமாகும்.

    அடுத்த வருடம் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் விசில் போடு.

    இவ்வாறு வீடியோவில் கூறியிருந்தார்.
    Next Story
    ×