என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியாவிடம் ‘ஸ்பெஷல் பெர்பார்மன்ஸ்’ஐ எதிர்பார்க்கலாம்: யுவராஜ் சிங்
Byமாலை மலர்3 May 2019 1:36 PM GMT (Updated: 3 May 2019 1:36 PM GMT)
ஹர்திக் பாண்டியாவிடம் உலகக்கோப்பையில் ‘ஸ்பெஷல் பெர்பார்மன்ஸ்’ஐ எதிர்பார்க்கலாம் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். #IPL2019 #HardikPandya
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெத் ஓவர்களில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் மைதானத்திற்கு வெளியே அனுப்பி வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 34 பந்தில் 91 ரன்கள் குவித்தார். இதே அணியில் இந்தியா இரண்டு உலகக்கோப்பைகளை வாங்குவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த யுவராஜ் சிங் உள்ளார்.
உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ஸ்பெஷல் பெர்பார்மன்ஸ்-ஐ எதிர்பார்க்கலாம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா குறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘நான் அவரிடம் பேசும்போது பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தேன். தற்போது அவர் பேட்டிங் செய்து வரும் நிலை மிகவும் அபாரமாக உள்ளது. இதை அப்படியே உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.
அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். ஆனால், அவர் நெருக்கடியை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்துதான் அது அமையும். பயிற்சி ஆட்டத்தில் இருந்து ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அவர் பந்தை மிகவும் சிறப்பாக எதிர்கொள்கிறார். நான் அவரிடம் ‘‘இது உங்களுக்கு மிகவும் சிறப்பான தொடராக இருக்கப்போகிறது’’ என்றேன்.
கொல்கத்தாவுக்கு எதிராக 34 பந்தில் 91 ரன்கள் அடித்ததை நான் பார்த்த சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸில் ஒன்றாக கருதுகிறேன். ஏனென்றால், அவர் நான்கு தரமான பந்து வீச்சாளர்கள் எதிர்த்து விளையாடினார்’’ என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 34 பந்தில் 91 ரன்கள் குவித்தார். இதே அணியில் இந்தியா இரண்டு உலகக்கோப்பைகளை வாங்குவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த யுவராஜ் சிங் உள்ளார்.
உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ஸ்பெஷல் பெர்பார்மன்ஸ்-ஐ எதிர்பார்க்கலாம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா குறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘நான் அவரிடம் பேசும்போது பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தேன். தற்போது அவர் பேட்டிங் செய்து வரும் நிலை மிகவும் அபாரமாக உள்ளது. இதை அப்படியே உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.
அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். ஆனால், அவர் நெருக்கடியை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்துதான் அது அமையும். பயிற்சி ஆட்டத்தில் இருந்து ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அவர் பந்தை மிகவும் சிறப்பாக எதிர்கொள்கிறார். நான் அவரிடம் ‘‘இது உங்களுக்கு மிகவும் சிறப்பான தொடராக இருக்கப்போகிறது’’ என்றேன்.
கொல்கத்தாவுக்கு எதிராக 34 பந்தில் 91 ரன்கள் அடித்ததை நான் பார்த்த சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸில் ஒன்றாக கருதுகிறேன். ஏனென்றால், அவர் நான்கு தரமான பந்து வீச்சாளர்கள் எதிர்த்து விளையாடினார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X