search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸி.க்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு இல்லை- இணைந்தார் பும்ரா
    X

    ஆஸி.க்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு இல்லை- இணைந்தார் பும்ரா

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை. பும்ரா அணியில் இணைந்துள்ளார். #INDvAUS
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 24-ந்தேதியும், 2-வது போட்டி 27-ந்தேதி பெங்களூருவிலும் நடக்கிறது.

    இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, தவான் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் ஓய்வு கொடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட பும்ரா, மீண்டும் அணியில் இணைந்துள்ளார். சுழற்பந்து வீச்சாளரான மயாங்க் மார்கண்டே முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.



    புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வீரர் ஷுப்மான் கில்லும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. கேஎல் ராகுல், 4. ரிஷப் பந்த், 5. தினேஷ் கார்த்திக், 6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 7. ஹர்திக் பாண்டியா, 8. குருணால் பாண்டியா, 9. விஜய் சங்கர், 10. சாஹல், 11. பும்ரா, 12. உமேஷ் யாதவ், 13. சித்தார்த் கவுல், 14. மயாங்க் மார்கண்டே, 15. ஷிகர் தவான்.
    Next Story
    ×