search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒருநாள் போட்டி- டோனியின் சாதனையை கோலி முறியடிப்பாரா?
    X

    3-வது ஒருநாள் போட்டி- டோனியின் சாதனையை கோலி முறியடிப்பாரா?

    ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் மகேந்திர சிங் டோனி சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. #INDvWI #ViratKohli #MsDhoni
    புனே:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 323 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி ‘டை’ ஆனது. வெஸ்ட் இண்டீஸ் 321 ரன்னை எடுத்து ‘டை’ செய்து பாராட்டை பெற்றது.

    இதனால் இரு அணிகளும் இன்றைய 3-வது போட்டியில் சமபலத்துடன் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் அதே வேட்கையுடன் இருக்கிறது.

    ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் டோனி 4-வது இடத்தில் உள்ளார். அவரை 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி கேப்டன் விராட்கோலி முந்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டோனி 273 இன்னிங்ஸ் விளையாடி 10,143 ரன் எடுத்து உள்ளார். கோலி 205 இன்னிங்சில் 10,076 ரன் எடுத்துள்ளார். டோனியை முந்த அவருக்கு இன்னும் 66 ரன் தேவை. தொடரின் 2 ஆட்டத்தில் சதம் அடித்துள்ள கோலி இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடினால் டோனியை முந்துவார்.

    அதே நேரத்தில் டோனியும் தனது திறமையை வெளிப்படுத்தினால் தனது இடத்தை இப்போதைக்கு தக்க வைத்துக் கொள்ளலாம். தெண்டுல்கர் 18,426 ரன்னுடன் முதல் இடத்திலும், கங்குலி 11,363 ரன்னுடன் 2-வது இடத்திலும், டிராவிட் 10,405 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். #INDvWI #ViratKohli #MsDhoni
    Next Story
    ×