search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முரளிவிஜய் புகாருக்கு தேர்வு குழு தலைவர் மறுப்பு
    X

    முரளிவிஜய் புகாருக்கு தேர்வு குழு தலைவர் மறுப்பு

    நீக்கத்துக்கான காரணம் முரளி விஜய் தெரிவிக்காததால் அந்த புகாருக்கு தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுப்பு தெரிவித்துள்ளார். #MuraliVijay #Indianteamselectioncommittee

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற தொடக்க வீரர் முரளி விஜய் சரியாக விளையாடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறும்போது, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு என்னிடம் தேர்வு குழு தலைவரோ, உறுப்பினர்களோ பேசவில்லை. நீக்கத்துக்கான காரணத்தை வீரர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    ஆனால் முரளி விஜய்யின் கருத்தை இந்திய அணி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

    முரளி விஜய் அணியில் இருந்து ஏன் நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்து எனது சக தேர்வாளர் தேவங்காந்தி அவரிடம் தெளிவாக தெரிவித்து விட்டார். அதன்பிறகு முரளி விஜய் இப்படியொரு கருத்து தெரிவித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 

    ஷிகர் தவான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் அவர் ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகள் கொடுத்த பின்புதான் நீக்கும் முடிவை எடுத்தோம் என்றார். #MuraliVijay #Indianteamselectioncommittee

    Next Story
    ×