search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்- காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா நேவால்
    X

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்- காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா நேவால்

    சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #SainaNehwal
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னாள் சாம்பியன் வீராங்கனையான தாய்லாந்தின் ரட்சனோக் இந்தானோன்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் சாய்னா நேவால் 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.



    கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா ஜோடி மலேசியாவின் கோஹ் சூன் ஹயாத் - ஷெவோன் ஜெமி லாய் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 20-22, 21-14, 21-6 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    Next Story
    ×