search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி எந்த வரிசையில் களம் இறங்குவார் என்பது கோடானகோடி கேள்வி- ரோகித் சர்மா
    X

    விராட் கோலி எந்த வரிசையில் களம் இறங்குவார் என்பது கோடானகோடி கேள்வி- ரோகித் சர்மா

    விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்வார் என்பது கோடானகோடி கேள்வி என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவரான கேஎல் ராகுல் சீமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டி20 போட்டியில் 3-வது வீரராக களம் இறங்கிய ராகுல் சதம் அடித்து அசத்தினார். இதனால் ஒருநாள் போட்டியில் இடம்பிடித்தால் எந்த இடத்தில் அவர் களம் இறங்குவார் என்பதுதான் தற்போதைய கேள்வி.

    தவான், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகின்றனர். 3-வது வீரராக கேப்டன் விராட் கோலி களம் இறங்கி வருகிறார். இவர் அந்த இடத்தில் களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் கேஎல் ராகுல் 3-வது இடத்தில் களம் இறங்க வேண்டுமென்றால், விராட் கோலி தனது இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்.



    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘கேஎல் ராகுல் ஒருநாள் போட்டியில் 3-வது இடத்தில் களம் இறங்குவாரா? 4-வது இடத்தில் களம் இறங்குவாரா? என்று பேச்சு எழுந்து வருகிறது. உண்மையிலேயே அவர் சிறந்த ஃபார்மில் உள்ளார். நாளைய போட்டியின்போதுதான் எந்த இடத்தில் களம் இறங்க போகிறார் என்பது நமக்குத் தெரியும்.

    3 அல்லது 4-வது இடத்தில் களம் இறக்கப்படலாம். கேப்டன் அவரை எந்த இடத்தில் களம் இறக்க இருக்கிறார் என்பது குறித்து ஏதும் எனக்கும் தெரியாது. இதுதான் தற்போதைய கோடானகோடி கேள்வியாகும்’’ என்றார்.
    Next Story
    ×