search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் நான்தான்- ரஷித் கான் சொல்கிறார்
    X

    ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் நான்தான்- ரஷித் கான் சொல்கிறார்

    ஆப்கானிஸ்தான் அதிபர் பாராட்டிய பிறகு, நான்தான் அந்நாட்டின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார். #RashidKhan
    ஐபிஎல் 2018 தொடர் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் 17 ஆட்டத்தில் 21 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 2-வது இடம்பிடித்துள்ளார். குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். 10 பந்தில் 34 ரன்கள் விளாசியதுடன், 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

    ரஷித் கானின் ஆல்ரவுண்டர் திறமையை பார்த்து அசந்துபோன சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் புகழாரம் சூட்டியிருந்தார். ஆப்கானிஸ்தான் அதிபர், ‘‘ரஷித் கான் எங்கள் சொத்து. அவரை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்’’ என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் வாழ்த்துக்குப் பிறகு தற்போது நாள் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகவும் பிரபலமான நபர் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘ஆப்கானிஸ்தான் அதிபர் வாழ்த்திய பிறகு நான்தான் எங்கள் நாட்டின் மிகவும் பிரபலமான நபர் என்பது எனக்குத் தெரியும்.



    நான் போட்டி முடிந்து பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது, எனது நண்பர்கள் சச்சின் தெண்டுகர் டுவிட்டை எனக்கு ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பினர். அதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் அவருக்கு பதில் அனுப்புவதற்கு முன் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என எழுத வேண்டும் என்றே தெரியவில்லை. இறுதில் அவருக்கு பதில் அளித்தேன்.

    ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானே அந்த டுவிட்டை பார்த்திருக்கும். ஆப்கானிஸ்தானில் தெண்டுல்கர் மிகமிக பிரபலமானவர். என்னை அவர் வாழ்த்தியிருப்பது கண்டு ஒவ்வொருவரும் ஆச்சர்யம் அடைந்திருப்பார்கள். அவருடைய வாழ்த்து இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×