search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் ஹசாரே டிராபி- டெல்லி அணியில் காம்பீர்- ரகானேவுக்கு ஓய்வு
    X

    விஜய் ஹசாரே டிராபி- டெல்லி அணியில் காம்பீர்- ரகானேவுக்கு ஓய்வு

    விஜய் ஹசாரே டிராபி தொடரின் காலிறுதிக்கான டெல்லி அணியில் காம்பீர் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் ரகானேவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் ஐதராபாத், கர்நாடகா, மும்பை, மகாராஷ்டிரா, பரோடா, சவுராஷ்டிரா ஆந்திரா, டெல்லி அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை மற்றும் நாளைமறுநாள் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. நாளை நடக்கும் காலிறுதி ஆட்டங்களில் ஐதராபாத் - கர்நாடகா, மும்பை - மகாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நாளைமறுநாள் நடைபெற்று காலிறுதி ஆட்டங்களில் பரோடா - சவுராஷ்டிரா, ஆந்திரா-டெல்லி  அணிகள் மோதுகின்றன. காயம் காரணமாக லீக் ஆட்டங்களில் விளையாடாமல் இருந்து கவுதம் காம்பீர் டெல்லி அணியில் இடம்பிடித்துள்ளார். ஏற்கனவே டெல்லி அணியில் உன்முக்த் சந்த், ஹைடென் டலால், மன்ஜோத் கல்ரா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அவர்களுடன் காம்பீர் இணைகிறார்.



    கர்நாடகா அணியில் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் காயத்தால் பங்கேற்கவில்லை. அவர் இல்லாததால் வேகப்பந்து வீச்சு பணியில் அந்த அணிக்கு பின்னடைவே. மேலும், வினய் குமாருக்குப் பதிலாக கருண் நாயர் கேப்டனாக பணியாற்ற உள்ளார்.

    பரோடா அணியில் யூசுப் பதான் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக அக்சய் பிரம்பாத் சேர்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் மும்பை அணியில் இணைந்துள்ளார். ரகானே ஓய்வு கேட்டதால் மும்பை கிரிக்கெட் சங்கம் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளது. #VijayHazareTrophy #Gambhir #Rahane
    Next Story
    ×