என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஆரோன் பிஞ்ச் ஆடுவாரா?: காயத்தால் அவதி
Byமாலை மலர்15 Sep 2017 7:51 AM GMT (Updated: 15 Sep 2017 7:51 AM GMT)
ஆஸ்திரேலிய தொடக்க வீரரான ஆரோன் பிஞ்ச் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியில் ஆடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
ஸ்டீவன்சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்தப்போட்டிக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் பயிற்சியின் போது காயம் அடைந்தார். காலின் பின் பகுதியில் அவருக்கு ஏற்கனவே காயம் இருந்தது. தற்போதைய பயிற்சியின்போது இந்த காயம் மிகவும் தீவிரமானது.
இந்த காயம் காரணமாக ஆரோன் பிஞ்ச் முதல் போட்டியில் ஆடுவது சந்தேகமே. ஏற்கனவே அவர் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை.
ஆரோன் பிஞ்ச் விளையாட முடியாமல் போவது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவருக்கு பதிலாக ஹில்டன் கார்ட்ரைட், வார்னருடன் இணைந்து தொடக்க வீரர்களாக களம் இறங்கலாம்.
முதல் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் தனித் தனியாக சென்னை வந்தனர். இன்று மாலை இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
ஸ்டீவன்சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்தப்போட்டிக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் பயிற்சியின் போது காயம் அடைந்தார். காலின் பின் பகுதியில் அவருக்கு ஏற்கனவே காயம் இருந்தது. தற்போதைய பயிற்சியின்போது இந்த காயம் மிகவும் தீவிரமானது.
இந்த காயம் காரணமாக ஆரோன் பிஞ்ச் முதல் போட்டியில் ஆடுவது சந்தேகமே. ஏற்கனவே அவர் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை.
ஆரோன் பிஞ்ச் விளையாட முடியாமல் போவது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவருக்கு பதிலாக ஹில்டன் கார்ட்ரைட், வார்னருடன் இணைந்து தொடக்க வீரர்களாக களம் இறங்கலாம்.
முதல் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் தனித் தனியாக சென்னை வந்தனர். இன்று மாலை இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X