என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை பயிற்சியாளர் யார்? என்ற அறிவிப்பு இன்று இல்லை: கங்குலி
Byமாலை மலர்10 July 2017 12:57 PM GMT (Updated: 10 July 2017 12:57 PM GMT)
தலைமை பயிற்சியாளர் நியமிப்பது குறித்து கேப்டன் மற்றும் சிலரிடம் பேச வேண்டியிருப்பதால், பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு இன்று இல்லை எனக் கங்குலி கூறியுள்ளார்.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையில் மனக்கசப்பு இருந்ததால், அனில் குமப்ளேயின் பதவிக்காலம் ஓராண்டிற்குப் பிறகு நீட்டிக்கப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின், வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அவரை பயிற்சியாளராக பணியாற்றும்படி பிசிசிஐ கேட்டுக்கொண்டது. ஆனால், அனில் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகினார்.
இந்திய அணி வரும் 26-ந்தேதி இலங்கையுடன் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. இந்த தொடருக்கு முன் புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க கங்குலி தலைமையிலான ஆலோசனைக்குழு (கங்குலியுடன் லஷ்மண், தெண்டுல்கர்) தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 10 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6 பேரிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு, மாலை புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் முடிந்த பின்னர் கங்குலி பேட்டியளித்தார். அப்போது புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு இன்று இல்லை என்று கூறினார்.
புதிய தலைமை பயிற்சியாளர் குறித்து கங்குலி கூறுகையில் ‘‘புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு இன்று இல்லை. இன்னும் சில நாட்கள் தேவைப்படுகிறது. இன்று ராஜ்புட், ரவி சாஸ்திரி, சேவாக், பைபஸ் மற்றும் டாம் மூடி ஆகியோருடன் நேர்காணல் நடைபெற்றது.
கேப்டன் உள்பட சிலபேரிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளது. உடனடியாக பயிற்சியாளர் பெயரை அறிவிக்க வேண்டாம் என்று நினைக்கின்றோம். இலங்கை தொடரை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை’’ என்றார்.
இந்திய அணி வரும் 26-ந்தேதி இலங்கையுடன் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. இந்த தொடருக்கு முன் புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க கங்குலி தலைமையிலான ஆலோசனைக்குழு (கங்குலியுடன் லஷ்மண், தெண்டுல்கர்) தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 10 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6 பேரிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு, மாலை புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் முடிந்த பின்னர் கங்குலி பேட்டியளித்தார். அப்போது புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு இன்று இல்லை என்று கூறினார்.
புதிய தலைமை பயிற்சியாளர் குறித்து கங்குலி கூறுகையில் ‘‘புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு இன்று இல்லை. இன்னும் சில நாட்கள் தேவைப்படுகிறது. இன்று ராஜ்புட், ரவி சாஸ்திரி, சேவாக், பைபஸ் மற்றும் டாம் மூடி ஆகியோருடன் நேர்காணல் நடைபெற்றது.
கேப்டன் உள்பட சிலபேரிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளது. உடனடியாக பயிற்சியாளர் பெயரை அறிவிக்க வேண்டாம் என்று நினைக்கின்றோம். இலங்கை தொடரை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X