search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியைப் போல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ? என பாஜகவினர் மனைவிகள் அச்சம் - மாயாவதி
    X

    மோடியைப் போல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ? என பாஜகவினர் மனைவிகள் அச்சம் - மாயாவதி

    மோடி தனது மனைவியை தவிக்கவிட்டு ஓடியதுபோல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ? என பாஜகவினர் மனைவிகள் அஞ்சுவதாக மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பாஜகவில் இருக்கும் தங்களது கணவர்கள் பிரதமர் மோடியை நெருங்கும்போது அவர்களின் மனைவிகள் எல்லாம் அச்சப்படுவதாக எனக்கு தெரியவந்துள்ளது. மோடியை போலவே தங்களது கணவர்களும் நம்மை கைவிட்டு ஓடிப் போவார்களோ? என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.



    அரசியல் ஆதாயத்திற்காக கட்டிய மனைவியை கைவிட்ட மோடி மற்றவர்களின் சகோதரிகளுக்கும் மனைவிகளுக்கும் எப்படி மதிப்பளிப்பார்?

    எனவே, இதைப்போன்ற ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டில் உள்ள பெண்கள் மோடியை போன்றவர்களுக்கு வாக்களிக்க கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இதுவே மோடியால் கைவிடப்பட்ட அவரது மனைவிக்கு நாம் செய்கின்ற மரியாதையாக இருக்கும்.

     தனது செய்தி குறிப்பில் மாயாவதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×