search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெஜ்ரிவாலுக்கு பளார் விட்டவருக்கு 2 நாள் சிறைக்காவல்
    X

    கெஜ்ரிவாலுக்கு பளார் விட்டவருக்கு 2 நாள் சிறைக்காவல்

    தேர்தல் பிரசாரத்தின்போது டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் அறைந்த நபருக்கு இரு நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. #slappingKejriwal #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லி முதல்- மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மோத்தி நகர் பகுதியில் நேற்று மாலை திறந்த வாகனத்தில் சென்று அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டியவாறு ஓடிவந்து வாகனத்தின் மீது ஏறிநின்று, கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் சற்று தடுமாறி நிலைகுலைந்தார்.

    அவரை தாக்கிய சுரேஷ் என்பவரை ஆம் ஆத்மி தொண்டர்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

    அவர் மீது டெல்லி காவல்துறையின் கிரிமினல் சட்டப்பிரிவு 107/5-ன்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். கைதான சுரேஷை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். #slappingKejriwal #ArvindKejriwal 
    Next Story
    ×