search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவோயிஸ்ட் மிரட்டல் - ஒடிசாவின் மால்கன்கிரியில் ஒரு வாக்கு கூட பதிவாகாத 2 வாக்குச்சாவடிகள்
    X

    மாவோயிஸ்ட் மிரட்டல் - ஒடிசாவின் மால்கன்கிரியில் ஒரு வாக்கு கூட பதிவாகாத 2 வாக்குச்சாவடிகள்

    மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் ஒடிசா மாநிலத்தின் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதிலும் உள்ள 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. 

    20 மாநிலங்களின் 91 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 

    அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது.

    இதற்கிடையே, ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால், மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்நிலையில், மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் ஒடிசா மாநிலத்தின் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஒடிசா மாநிலத்தில் தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ஆனாலும், மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தெரிவித்தனர். #LokSabhaElections2019
    Next Story
    ×