என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏழைகள் வீட்டில் காவலாளி ஏது? - மோடியின் சவுக்கிதார் பிரசாரத்துக்கு ராகுல் பதிலடி
Byமாலை மலர்23 March 2019 10:39 AM GMT (Updated: 23 March 2019 11:06 AM GMT)
பணக்காரர்கள் மட்டுமே வாசலில் காவல்காரர்களை நிறுத்தி வைப்பார்கள். ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்த்தது உண்டா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #RahulmocksModi #chowkidar #chowkidarcampaign
பாட்னா:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். புர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய், விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனது ஏன்? என்று உங்களுக்கு அவர் எப்போதாவது விளக்கம் அளித்திருக்கிறாரா?
தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏதாவது செய்திருக்கிறாரா?
நான் உங்கள் காவலாளி என்று கூறும் மோடி இந்த நாட்டின் பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளியாக இருக்கிறார். பணக்காரர்கள் மட்டுமே வாசலில் காவல்காரர்களை நிறுத்தி வைப்பார்கள். ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்த்தது உண்டா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரை சகோதரர்களே என்று அழைத்து சகோதரர்களைப்போல் நடத்தும் மோடி, உங்களைப்போன்ற சாமான்ய மக்களை நண்பர்களே என்று அழைக்கிறார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பலகாலமாக கஷ்டப்பட்டு பெண்கள் சேமித்து வைத்திருந்த பணம்கூட பறிக்கப்பட்டது. வசதி படைத்தவர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய முடிந்த மோடி அரசால் ஏழை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாமல் போனது ஏன்?
சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தோம். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தவுடன் முதல் வேலையாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம்.
அதேபோல், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் நிதியுதவி திட்டத்தை நிச்சயமாக நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #RahulmocksModi #chowkidar #chowkidarcampaign
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X