search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ன ஆனாலும் கவலை இல்லை, மீண்டும் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுவேன்  - சத்ருகன் சின்ஹா
    X

    என்ன ஆனாலும் கவலை இல்லை, மீண்டும் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுவேன் - சத்ருகன் சின்ஹா

    பாஜகவில் பிரதமர் மோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நடிகர் சத்ருகன் சின்ஹா,‘நிலைமை எவ்வாறாக இருந்தாலும் மீண்டும் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுவேன்’ என தெரிவித்துள்ளார். #ShatrughanSinha #ShatrughanSinhacontest #PatnaSahib
    லக்னோ:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா, அம்மாநிலத்தின் பாட்னா சாகிப் தொகுதி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.

    பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் இவர், சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆகியோரை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    சத்ருகன் சின்ஹாவின் மனைவியான பூனம் சின்ஹா வரும் பாராளுமன்ற தேர்தலில் சாமாஜ்வாதி கட்சி வேட்பாளராக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் போட்டியிடலாம் என தகவல் வெளியானது. இதை சத்ருகன் சின்ஹா மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை.



    எனினும், பாஜகவின் மிக மூத்த உறுப்பினர் என்பதால் கட்சியின் மேலிடம் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனினும், வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை அவருக்கு பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என்னும் பேச்சு பரவலாக உள்ளது.

    இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக பிரபல செய்தி நிறிவனத்துக்கு பேட்டியளித்த சத்ருகன் சின்ஹா, (கட்சியின் முடிவு எதுவாக இருந்தாலும்) ‘நிலைமை எவ்வாறாக இருந்தாலும் மீண்டும்  பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுவேன்’ என உறுதிப்பட தெரிவித்துள்ளார். #ShatrughanSinha  #ShatrughanSinhacontest #PatnaSahib
    Next Story
    ×