search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shatrughansinha"

    பிரதமர் மோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா, காங்கிரஸில் இன்று இணைந்தார். #ShatrughanSinha #Congress
    புது டெல்லி:

    சத்ருகன் சின்ஹா, பீகார் மாநிலம் பாட்னாசாகிப் தொகுதியின் பாஜக எம்.பி. மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த இவர், சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆகியோரை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பாஜகவின் மிக மூத்த உறுப்பினர் என்பதால் கட்சியின் மேலிடம் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகியதாகவும் அறிவித்தார். இது குறித்து கூறுகையில், 'நீண்டகாலம் பணியாற்றிவிட்டு பாஜகவில் இருந்து விலகுவது வலியை தருவதாகத்தான் இருந்தது. ஆனால் பிரபல தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அருண்சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை கட்சி நடத்திய விதம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.



    வாஜ்பாய் காலத்தில் கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது கட்சியில் ஜனநாயகம் உண்மையான உணர்வுடன் இருந்தது. ஆனால் இப்போது ஒரு நபர் ஆட்சி, இரு நபர் படை (பிரதமர் மோடி, அமித்ஷா) என்று தான் இருக்கிறது' என கூறியிருந்தார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் முன்னிலையில் சத்ருகன் சின்ஹா இன்று காங்கிரஸில் இணைந்தார்.  #ShatrughanSinha #Congress

    எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்ற சத்ருகன்சின்கா மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. #ShatrughanSinha

    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கைகோர்த்து உள்ளனர்.

    இம்மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரிகளான பா.ஜனதா கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி, மற்றும் சத்ருகன் சின்கா எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர். பா.ஜனதாவில் அதிருப்தியில் இருக்கும் சத்ருகன்சின்கா ஏற்கனவே மோடியையும், மத்திய அரசின் செயல்பாட்டையும் வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார்.

    இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் நடத்திய மாநாட்டில் அவர் பங்கேற்றது பா.ஜனதா தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து சத்ருகன்சின்கா மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது:-

    பா.ஜனதா வழங்கிய எம்.பி.பதவியில் இருந்து சத்ருகன்சின்கா சலுகைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் அதே வேளையில் கட்சிக்கு எதிராக பேசிவருகிறார். இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பா.ஜனதாவுக்கு எப்போதுமே முக்கியமானது.

    இதுதொடர்பாக கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும். சில பேர் கட்சி பின்னால் இருக்க விரும்புகிறார்கள். இதனால் கட்சியில் இருந்து விலகாமல் உள்ளனர். அதேநேரத்தில் அவர்கள் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர் என்றார். #ShatrughanSinha

    ×