என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா காங்கிரஸில் இணைந்தார்
Byமாலை மலர்6 April 2019 7:23 AM GMT (Updated: 6 April 2019 7:23 AM GMT)
பிரதமர் மோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா, காங்கிரஸில் இன்று இணைந்தார். #ShatrughanSinha #Congress
புது டெல்லி:
சத்ருகன் சின்ஹா, பீகார் மாநிலம் பாட்னாசாகிப் தொகுதியின் பாஜக எம்.பி. மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த இவர், சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆகியோரை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
வாஜ்பாய் காலத்தில் கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது கட்சியில் ஜனநாயகம் உண்மையான உணர்வுடன் இருந்தது. ஆனால் இப்போது ஒரு நபர் ஆட்சி, இரு நபர் படை (பிரதமர் மோடி, அமித்ஷா) என்று தான் இருக்கிறது' என கூறியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் முன்னிலையில் சத்ருகன் சின்ஹா இன்று காங்கிரஸில் இணைந்தார். #ShatrughanSinha #Congress
சத்ருகன் சின்ஹா, பீகார் மாநிலம் பாட்னாசாகிப் தொகுதியின் பாஜக எம்.பி. மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த இவர், சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆகியோரை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பாஜகவின் மிக மூத்த உறுப்பினர் என்பதால் கட்சியின் மேலிடம் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகியதாகவும் அறிவித்தார். இது குறித்து கூறுகையில், 'நீண்டகாலம் பணியாற்றிவிட்டு பாஜகவில் இருந்து விலகுவது வலியை தருவதாகத்தான் இருந்தது. ஆனால் பிரபல தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அருண்சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை கட்சி நடத்திய விதம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
வாஜ்பாய் காலத்தில் கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது கட்சியில் ஜனநாயகம் உண்மையான உணர்வுடன் இருந்தது. ஆனால் இப்போது ஒரு நபர் ஆட்சி, இரு நபர் படை (பிரதமர் மோடி, அமித்ஷா) என்று தான் இருக்கிறது' என கூறியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் முன்னிலையில் சத்ருகன் சின்ஹா இன்று காங்கிரஸில் இணைந்தார். #ShatrughanSinha #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X