search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் சொகுசு கார் மீது  குப்பைத்தொட்டி விழுந்த விபத்தில் 3 பேர் பலி
    X

    டெல்லியில் சொகுசு கார் மீது குப்பைத்தொட்டி விழுந்த விபத்தில் 3 பேர் பலி

    டெல்லியில் சொகுசு கார் ஒன்றின் மீது குப்பைத்தொட்டி தவறி விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #DelhiAccident
    புதுடெல்லி:

    டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அருகில் சொகுசு காரில் சுமித்(29), அவரது தாயார்  ரித்து (59), மனைவி ருச்சி(27) மற்றும் சுமித்தின் வயது 3 மகன் ஆகியொர் சென்றுகொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக குப்பை வண்டி ஒன்றில் இருந்த குப்பைத்தொட்டி சாலையில் சென்றுக் கொண்டிருந்த இவர்கள் காரின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து நேற்றிரவு 1 மணி அளவில் நடைபெற்றது.

    இந்த விபத்தில் சுமித், ருச்சி மற்றும் ரித்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமித்தின் மகன் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    விபத்து ஏற்பட்டதும் குப்பை வண்டியின் ஓட்டுனர் தப்பி சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக அந்த ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் கமிஷ்னர் எஸ் டி மிஷ்ரா தெரிவித்துள்ளார்.  #DelhiAccident

    Next Story
    ×