என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் சொகுசு கார் மீது குப்பைத்தொட்டி விழுந்த விபத்தில் 3 பேர் பலி
Byமாலை மலர்20 Feb 2019 10:51 AM GMT (Updated: 20 Feb 2019 10:51 AM GMT)
டெல்லியில் சொகுசு கார் ஒன்றின் மீது குப்பைத்தொட்டி தவறி விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #DelhiAccident
புதுடெல்லி:
டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அருகில் சொகுசு காரில் சுமித்(29), அவரது தாயார் ரித்து (59), மனைவி ருச்சி(27) மற்றும் சுமித்தின் வயது 3 மகன் ஆகியொர் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக குப்பை வண்டி ஒன்றில் இருந்த குப்பைத்தொட்டி சாலையில் சென்றுக் கொண்டிருந்த இவர்கள் காரின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து நேற்றிரவு 1 மணி அளவில் நடைபெற்றது.
இந்த விபத்தில் சுமித், ருச்சி மற்றும் ரித்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமித்தின் மகன் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விபத்து ஏற்பட்டதும் குப்பை வண்டியின் ஓட்டுனர் தப்பி சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக அந்த ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் கமிஷ்னர் எஸ் டி மிஷ்ரா தெரிவித்துள்ளார். #DelhiAccident
டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அருகில் சொகுசு காரில் சுமித்(29), அவரது தாயார் ரித்து (59), மனைவி ருச்சி(27) மற்றும் சுமித்தின் வயது 3 மகன் ஆகியொர் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக குப்பை வண்டி ஒன்றில் இருந்த குப்பைத்தொட்டி சாலையில் சென்றுக் கொண்டிருந்த இவர்கள் காரின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து நேற்றிரவு 1 மணி அளவில் நடைபெற்றது.
இந்த விபத்தில் சுமித், ருச்சி மற்றும் ரித்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமித்தின் மகன் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விபத்து ஏற்பட்டதும் குப்பை வண்டியின் ஓட்டுனர் தப்பி சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக அந்த ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் கமிஷ்னர் எஸ் டி மிஷ்ரா தெரிவித்துள்ளார். #DelhiAccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X