search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகைகள் திருமணத்துக்கு செல்லும் மோடிக்கு சாமியார் இறுதிச்சடங்கில் பங்கேற்க நேரமில்லையா? - பரமேஸ்வரா
    X

    நடிகைகள் திருமணத்துக்கு செல்லும் மோடிக்கு சாமியார் இறுதிச்சடங்கில் பங்கேற்க நேரமில்லையா? - பரமேஸ்வரா

    நடிகைகள் திருமணத்துக்கு செல்லும் மோடிக்கு சாமியார் இறுதிச்சடங்கில் பங்கேற்க நேரமில்லையா? என்று கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா கேள்வி எழுப்பியுள்ளார். #PMModi #Parameshwara
    பெங்களூரு:

    111 வயதில் மறைந்த கர்நாடக மடாதிபதி சிவகுமார சுவாமி உடலுக்கு பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், சதானந்தகவுடா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது குறித்து காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து காங்கிரசை சேர்ந்த கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி நடிகர்- நடிகைகளின் திருமணங்களுக்கு போகிறார். பிரபலங்களை சந்திக்கிறார். ஆனால் நமது கடவுளாக வாழ்ந்து மறைந்தவரின் இறுதிச்சடங்குக்கு வர முடியவில்லை.



    தனது வாழ்க்கையை முழுமையாக ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஒதுக்கி பாடுபட்டு மறைந்துள்ளார் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி. அவருக்கு அஞ்சலி செலுத்த பிரதமருக்கு நேரம் இல்லையா?

    சாமியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை வீணாகி போய்விட்டது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PMModi #Parameshwara
    Next Story
    ×