என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்கண்ட் முன்னாள் மந்திரி காங்கிரசில் இணைந்தார்
Byமாலை மலர்29 Dec 2018 12:02 PM GMT (Updated: 29 Dec 2018 12:02 PM GMT)
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் மந்திரியுமான ஜலேஷ்வர் மஹாட்டோ இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். #JaleshwarMahato #JanataDalU #formerJharkhandMinister
புதுடெல்லி:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஜார்கண்ட் மாநில தலைவராக இருந்தவர் ஜலேஷ்வர் மஹாட்டோ. கடந்த 2000-2009 ஆண்டுவாக்கில் ஜார்கண்ட் சட்டசபையில் பாக்மாரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், அம்மாநில மந்திரிசபையிலும் பணியாற்றினார்.
தனது பதவிக்காலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டுக்கு பாடுபட்டவர் என்ற சிறப்பை பெற்ற ஜலேஷ்வர் மஹாட்டோ பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமான நண்பராக அறியப்பட்டவராவார்.
இந்நிலையில், இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த ஜலேஷ்வர் மஹாட்டோ, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார். #JaleshwarMahato #JanataDalU #formerJharkhandMinister
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X