search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது விவகாரம் - புதுச்சேரி அரசும் வழக்கு தொடர்ந்தது
    X

    விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது விவகாரம் - புதுச்சேரி அரசும் வழக்கு தொடர்ந்தது

    மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதை எதிர்த்து புதுச்சேரி அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது. #MekedatuDam #PuducherryGovtCase
    புதுடெல்லி:

    காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.



    இந்நிலையில் புதுச்சேரி அரசும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது, மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என புதுவை அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #MekedatuDam #PuducherryGovtCase
    Next Story
    ×