என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கேரள முதல் மந்திரியின் ஜாதி பெயரை கூறி திட்டிய பெண் கைது
கொழிஞ்சாம்பாறை, அக்.27-
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தபோதும் கேரளாவில் சில பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்த்து கடந்த 1 மாதமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
சபரிமலையில் நடைதிறக்கப்பட்டபோது சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அய்யப்பன் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று பெண்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொலைக்காட்சிகள் நேரடி ஒலிபரப்பு செய்தன.
அவ்வாறு ஒரு டி.வி.யில் பத்தினம்திட்டா சிறுகோல் கிராமத்தை சேர்ந்த சிவபிள்ளையின் மனைவி மணியம்மாள் (வயது 66) என்ற மூதாட்டி பேட்டி எடுத்தகொடுத்த நேரலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் ஜாதி பெயரை கூறி திட்டினார்.
இது நாடு முழுவதும் ஒலிபரப்பானது. இதனைத்தொடர்ந்து சமூக வலை வளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து ஆரண்முலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போராட்டத்தின்போது கேரள முதல்-மந்திரி வெளிநாடு சென்றிருந்தார்.
அவர் நாடு திரும்பியதும் உயர் போலீஸ் அதிகாரிகள் இது குறித்து அவரிடம் தெரிவித்தனர். இந்நிலையில் முதல்-மந்திரியை ஜாதி பெயரை கூறி திட்டிய மூதாட்டி மணியம்மாளை ஆரண்முலா போலீசார் நேற்று கைது செய்தனர். * * * கைது செய்யப்பட்ட மணியம்மாள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்