என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரப்பிரதேசத்தில் சாலை விபத்து - 7 பேர் பலி
Byமாலை மலர்13 Oct 2018 9:23 PM GMT (Updated: 13 Oct 2018 9:23 PM GMT)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்தனர். #Accident
லக்னோ :
உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் உள்ள மதரிபூர் எனும் கிராமத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில், 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் மோசமான நிலையில் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த 35 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துகுறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். #Accident
உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் உள்ள மதரிபூர் எனும் கிராமத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில், 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் மோசமான நிலையில் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த 35 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துகுறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். #Accident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X