search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசா சாலை விபத்தில் 5 பேர் பலி - இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
    X

    ஒடிசா சாலை விபத்தில் 5 பேர் பலி - இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

    ஒடிசா மாநிலத்தில் கார் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும் என அம்மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் தெரிவித்துள்ளார். #Accident #Odisha #NaveenPatnaik
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் இருந்து பட்ராபூர் பகுதிக்கு இறந்த உறவினரின் அஸ்தியை கரைப்பதற்காக காரில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது தீடிரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த கால்வாயில் விழுந்து மூழ்கியது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படகு மூலம் நடந்த மீட்பு நடவடிக்கையின் மூலம் ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டனர். 2 குழந்தைகள் உடபட 5 பேர் இந்த விபத்தில் பலியாகினர்.



    இந்த விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட அம்மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Accident #Odisha #NaveenPatnaik
    Next Story
    ×