search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரகாண்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - அமைச்சர் பிரகாஷ் பண்ட் அறிவிப்பு
    X

    உத்தரகாண்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - அமைச்சர் பிரகாஷ் பண்ட் அறிவிப்பு

    உத்தரகாண்ட் மாநிலத்தில் மந்திரிகளுக்கு இடையிலான ஆலோசனை கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதும் தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகாஷ் பண்ட் தெரிவித்துள்ளார். #PlasticBan #Uttarakhand #PrakashPant
    டேராடூன்:

    பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் பல்வேறு மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டது.



    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மந்திரி பிரகாஷ் பண்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதற்கும், சேமித்து வைக்கவும் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விளம்பரப்படுத்தவும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். #PlasticBan #Uttarakhand  #PrakashPant
    Next Story
    ×