search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனி, இத்தாலியில் 12 நாள் சுற்றுப்பயணம் - மம்தா பானர்ஜி புறப்பட்டு சென்றார்
    X

    ஜெர்மனி, இத்தாலியில் 12 நாள் சுற்றுப்பயணம் - மம்தா பானர்ஜி புறப்பட்டு சென்றார்

    மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை திரட்டும் நோக்கத்தில் அம்மாநில முதல் மந்திரி ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார். #MamataGermanytrip
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை திரட்டும் நோக்கத்தில் அம்மாநில முதல் மந்திரி ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார். #MamataGermanytrip

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நல்ல பலனை அளித்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதிய நிறுவனங்களின் உரிமையாளர்களும் ஜெர்மனி, இத்தாலி நாட்டு அரசுகளும் தங்கள் நாட்டுக்கு வருமாறு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுத்திருந்தன.

    அந்த அழைப்பை ஏற்று மம்தா பானர்ஜி இன்று காலை 9.45 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு புறப்பட்டு சென்றார். வழியில் துபாயில் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் ஜெர்மனி சென்றடையும் அவர் அங்கிருந்து இத்தாலி நாட்டின் மிலன் நகருக்கு செல்கிறார்.

    இருநாடுகளிலும் 12 நாள் சுற்றுப்பயணம் செய்து முதலீடுகளை திரட்டும் மம்தா, வரும் 28-ம் தேதி கொல்கத்தா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மம்தாவுடன் மேற்கு வங்காளம் மாநில அரசின் தலைமை செயலாளர் மலய் டேய், நிதிமந்திரி அமித் மித்ரா மற்றும் நிதித்துறை செயலாளர் திவேதி ஆகியோரும் சென்றுள்ளனர். #MamataGermanytrip ##MamataItalytrip
    Next Story
    ×