என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாடு முழுவதும் பாஜக அலை வீசுவதால் எதிர்க்கட்சிகள் கடும் அச்சத்தில் உள்ளன - பிரதமர் மோடி
Byமாலை மலர்14 Sep 2018 2:49 AM GMT (Updated: 14 Sep 2018 2:49 AM GMT)
2014-ல் இருந்ததை விட மிகப்பெரிய பாஜக அலை நாடு முழுவதும் வீசுவதால் எதிர்க்கட்சிகள் அச்சத்தில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #BJP
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி, ‘நமோ’ செல்போன் செயலி மூலம் அடிக்கடி பாஜக தொண்டர்களிடையே உரையாற்றி வருகிறார். அந்தவகையில் அருணாச்சல் மேற்கு, காசியாபாத், ஹசாரிபாக், ஜெய்ப்பூர் ஊரகம் மற்றும் நவடா பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாஜக தொண்டர்களிடம் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
2013 - 2014ம் ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது நாடு முழுவதும் மிகப்பெரிய பாஜக அலை வீசுகிறது. இதைப்பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. இந்த அலையே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய வைத்துள்ளது. இல்லையென்றால் அவை ஒவ்வொன்றும் அடித்துச் செல்லப்படும்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் குட்டு அம்பலமாகி இருக்கிறது. பாஜகவுக்கு வாக்களித்த மக்கள், ஊழலில் திளைத்த காங்கிரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர். ஆனால் எதிர்க்கட்சியாக கூட தங்கள் கடமையை அவர்கள் ஆற்றவில்லை.
ஊழலில் மூழ்கி இருந்த நிலக்கரி, தொலைத்தொடர்பு போன்ற துறைகளை அதிலிருந்து வெளியே எடுத்த எங்கள் அரசு, இன்று வேகமாக வளர்ச்சியடையும் துறையாக தொலைத்தொடர்பு துறையை மாற்றி இருக்கிறது.
பாஜகவில் மட்டுமே சாதாரண தொண்டரும் அதன் தலைவராக முடியும். நாளை என்னுடைய இடத்துக்கும் வேறு ஒருவரால் வர முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஒரு குடும்பத்தின் கட்சி. அந்த குடும்பத்தின் நலனுக்காக பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தியாகம் செய்து வருகின்றனர். அதைப்பார்த்து பரிதாபம் அடைகிறேன்.
பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் தனது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் கட்சியை பலப்படுத்த வேண்டும். எனது வாக்குச்சாவடியே வலிமையானது என்பதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். #PMModi #BJP
பிரதமர் நரேந்திர மோடி, ‘நமோ’ செல்போன் செயலி மூலம் அடிக்கடி பாஜக தொண்டர்களிடையே உரையாற்றி வருகிறார். அந்தவகையில் அருணாச்சல் மேற்கு, காசியாபாத், ஹசாரிபாக், ஜெய்ப்பூர் ஊரகம் மற்றும் நவடா பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாஜக தொண்டர்களிடம் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
2013 - 2014ம் ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது நாடு முழுவதும் மிகப்பெரிய பாஜக அலை வீசுகிறது. இதைப்பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. இந்த அலையே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய வைத்துள்ளது. இல்லையென்றால் அவை ஒவ்வொன்றும் அடித்துச் செல்லப்படும்.
எதிர்க்கட்சிகள் தங்கள் நம்பிக்கையின் நெருக்கடியை உணர்ந்துள்ளன. அவை தூக்கத்தில் இருந்து எழும்ப மறுக்கின்றன. பிற பிரச்சினைகளை பற்றி பேசுவதாலும், அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை அடுக்குவதாலும் வாக்காளர்களிடம் நம்பிக்கையை பெற முடியும் என நினைக்கின்றன. ஆனால் இந்திய மக்கள் இன்று உணர்திறன் மிக்கவர்களாகவும், அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் குட்டு அம்பலமாகி இருக்கிறது. பாஜகவுக்கு வாக்களித்த மக்கள், ஊழலில் திளைத்த காங்கிரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர். ஆனால் எதிர்க்கட்சியாக கூட தங்கள் கடமையை அவர்கள் ஆற்றவில்லை.
ஊழலில் மூழ்கி இருந்த நிலக்கரி, தொலைத்தொடர்பு போன்ற துறைகளை அதிலிருந்து வெளியே எடுத்த எங்கள் அரசு, இன்று வேகமாக வளர்ச்சியடையும் துறையாக தொலைத்தொடர்பு துறையை மாற்றி இருக்கிறது.
பாஜகவில் மட்டுமே சாதாரண தொண்டரும் அதன் தலைவராக முடியும். நாளை என்னுடைய இடத்துக்கும் வேறு ஒருவரால் வர முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஒரு குடும்பத்தின் கட்சி. அந்த குடும்பத்தின் நலனுக்காக பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தியாகம் செய்து வருகின்றனர். அதைப்பார்த்து பரிதாபம் அடைகிறேன்.
பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் தனது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் கட்சியை பலப்படுத்த வேண்டும். எனது வாக்குச்சாவடியே வலிமையானது என்பதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். #PMModi #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X