search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா பேருந்து விபத்து - பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு
    X

    தெலுங்கானா பேருந்து விபத்து - பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

    தெலுங்கானா மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. #Telangana #BusAccident
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால், மலைப்பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. 

    இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்தது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதைத்தொடர்ந்து, பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.

    இதற்கிடையே, பேருந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் சீனிவாசராவ் சென்ற வாரம் சிறந்த ஓட்டுனர் விருது வாங்கியவர் என்பது தெரிய வந்துள்ளது. #Telangana #BusAccident
    Next Story
    ×