search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஏர் இந்தியா பொது மேலாளர் நீக்கம்
    X

    விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஏர் இந்தியா பொது மேலாளர் நீக்கம்

    பாலியல் புகாருக்கு உள்ளான அதிகாரி, பொது மேலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. #AirIndia #AirHostess
    மும்பை:

    பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவில் பொது மேலாளராக (தலைமையகம்) பணியாற்றும் ஒரு உயர் அதிகாரி, தனக்கு 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக விமான பணிப்பெண் ஒருவர், கடந்த மே மாதம் குற்றம் சாட்டினார்.

    மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார். மத்திய பெண்கள் நலத்துறை மந்திரி மேனகா காந்தியை நேரில் சந்தித்து முறையிட்டார். அவரது புகார் பற்றி விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாலியல் புகாருக்கு உள்ளான அதிகாரி, பொது மேலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அவர் ஏற்கனவே மூத்த விமானியாக இருந்ததால், விமானி பொறுப்புக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறினார். 
    Next Story
    ×