search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரப்பிரதேசம் - கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு
    X

    உத்தரப்பிரதேசம் - கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 3 தினங்களாக பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. #UPRain
    லக்னோ:

    பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடானது.

    வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் சஹரான்பூரில் 11 பேரும், மீரட்டில் 3 பேரும், பெரெய்லியில் 2 பேரும் பலியாகினர்.

    ஆக்ராவில் 5 பேரும், மெயின்புரியில் 4 பேரும், முசாபர் நகர், கஸ்கஞ்ச் பகுதிகளில் 3 பேரும், கான்பூர், மதுரா, காசியாபாத், ரே பரேலி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 58 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 50-க்கு  மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முடுக்கி விட்டுள்ளார். கனமழையில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளர். அத்துடன், பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

    வீடு இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்கும்படியும் உத்தரவிட்டார். இந்த கனமழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #UPRain
    Next Story
    ×