என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
1996-ம் ஆண்டுக்கு பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரே அணியில் திரளும் எதிர்க்கட்சிகள்
Byமாலை மலர்24 May 2018 7:41 AM GMT (Updated: 24 May 2018 7:41 AM GMT)
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷாவை வீழ்த்துவதற்காக 1996-ம் ஆண்டுக்கு பிறகு பாரதிய ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரள்கின்றனர். #KumaraswamySwearingIn
புதுடெல்லி:
அப்போது தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது. வாஜ்பாய் பிரதமர் ஆனார். ஆனால், அந்த ஆட்சியை நீடிக்க விடக்கூடாது என்பதற்காக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. காங்கிரஸ், ஜனதா தளம், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல மாநில கட்சிகள் ஒரே அணியில் திரண்டன. இதனால் எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிக உறுப்பினர்கள் இருந்தனர். 16 நாட்களே ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.
இதற்கு பிறகு ஒரு போதும் எதிர்க்கட்சிகள் இதே போல் ஒரே அணியில் திரளவில்லை. இப்போது பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் 1996-ம் ஆண்டு போல் ஒரே அணியில் திரண்டு இருக்கின்றன.
நேற்று பெங்களூரில் நடந்த குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் எதிர்கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அணியாக கை கோர்த்து இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் நேற்றைய விழாவில் கலநது கொண்ட ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்கள் அணிவகுப்பில் பங்கேற்கவில்லை.
அவர்களும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இருந்தாலும் காங்கிரசுடன் சேர்ந்து பாரதிய ஜனதாவை எதிர்ப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் கை கோர்த்து நிற்கவில்லை.
அதே போல தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவும் இந்த அணியில் சேருவதற்கு தயக்கம் காட்டி நேற்றைய விழாவில் பங்கேற்கவில்லை. அவர் ஒரு நாள் முன்கூட்டியே வந்து வாழ்த்திவிட்டு சென்றார்.
மற்ற தலைவர்கள் அனைவரும் இப்போதே ஒன்று திரண்டுவிட்டார்கள். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் போது, அவர்களும் இந்த அணிக்கு வருவதற்கோ அல்லது அந்த அணியோடு இணைந்து செயல்படுவதற்கோ வாய்ப்பு உள்ளது.
இந்த வகையில் மோடிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று திரளும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு நேற்றைய பெங்களூர் நிகழ்ச்சி தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அது நீடிக்குமா? பாரதிய ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நிரந்தரமாக நிற்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.
இவ்வாறு எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேருவது பாரதிய ஜனதாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.
மோடி- அமித்ஷா அணி இதை எப்படி தடுக்க போகிறது என்பது அவர்கள் வகுக்கும் வியூகங்களை பொருத்து அமையும். #KumaraswamySwearingIn #UnitedInVictory
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X