search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் - இந்திய வீரர் படுகாயம்
    X

    சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் - இந்திய வீரர் படுகாயம்

    ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையோரம் அமைந்துள்ள சோதனை சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப் வீரர் ஒருவர் காயம் அடைந்தார். #PakistanArmyViolates
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்கள் சர்வதேச எல்லையோரம் அமைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று நள்ளிரவில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்கள் கையெறி குண்டுகளையும் வீசினர்.

    இந்த தாக்குதலுக்கு இந்திய படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஆனாலும், இந்த தாக்குதலில் பி.எஸ்.எப். வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பி எஸ் எப் வீரர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. #PakistanArmyViolates
    Next Story
    ×