என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உதவியாளர் கொலை வழக்கு: சிபு சோரன் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது
Byமாலை மலர்26 April 2018 11:34 PM GMT (Updated: 26 April 2018 11:34 PM GMT)
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியான சிபு சோரனின் உதவியாளர் சசிநாத் ஜா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிபுசோரன் உள்பட 5 பேரின் விடுதலையை சுப்ரீம் கோர்ட் உறுதிசெய்தது.
புதுடெல்லி:
ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான சிபு சோரனின் உதவியாளர் சசிநாத் ஜா, கடந்த 1994-ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக சிபு சோரன் உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி கோர்ட்டு, சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மற்ற 4 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு சிபு சோரன் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து கடந்த 2007-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் ஜாவின் உறவினர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஆர்.எப்.நாரிமன் அமர்வு, சிபு சோரனை விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நேற்று உறுதி செய்தது.
ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான சிபு சோரனின் உதவியாளர் சசிநாத் ஜா, கடந்த 1994-ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக சிபு சோரன் உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி கோர்ட்டு, சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மற்ற 4 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு சிபு சோரன் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து கடந்த 2007-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் ஜாவின் உறவினர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஆர்.எப்.நாரிமன் அமர்வு, சிபு சோரனை விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நேற்று உறுதி செய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X