என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிராம சுயராஜ்ஜியத்தை காந்தி எப்போதுமே வலியுறுத்தி வந்தார் - பிரதமர் மோடி
Byமாலை மலர்24 April 2018 8:55 AM GMT (Updated: 24 April 2018 8:55 AM GMT)
தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்று ராஷ்டரிய கிராம சுவராஜ் அபியான் திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி கிராம சுயராஜ்ஜியத்தை காந்தி எப்போதுமே வலியுறுத்தி வந்ததாக குறிப்பிட்டார். #PMModi #RashtriyaGramSwarajAbhiyan #MadhyaPradesh
இந்தூர்:
கிராமங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவதற்காக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 24-4-2010 அன்று பஞ்சாயத்து ராஜ்-ஐ நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த சட்டம் அறிமுகப்படுத்த நாள் நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டின் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்லா மாவட்டத்திற்குட்பட்ட ராம்நகர் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது, மத்திய அரசின் ராஷ்டரிய கிராம சுவராஜ் அபியான் திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, கிராம சுயராஜ்ஜியத்தை காந்தி எப்போதுமே வலியுறுத்தி வந்ததாக குறிப்பிட்டார். மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்துவதற்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கான செயல்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
கிராமப்புற வளர்ச்சியை பொருத்தமட்டில் நிதி ஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவமானது. ஆனால், கடந்த ஆண்டுகளில் இதில் பல குறைபாடுகள் இருந்தன.
ஆனால், ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி வெளிப்படையாகவும், உரிய முறையிலும் செலவழிக்கப்படுகிறதா? என்பதன் அவசியம் தொடர்பாக மக்கள் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்த மோடி, மகாத்மா காந்தி எப்போதுமே கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததாகவும், கிராமங்களுக்கு தன்னாட்சி உரிமை அளிக்கும் கிராம சுயராஜ்ஜியம் பற்றி வலியுறுத்தி பேசி வந்ததாகவும் குறிப்பிட்டார். #PMModi #RashtriyaGramSwarajAbhiyan #MadhyaPradesh
கிராமங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவதற்காக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 24-4-2010 அன்று பஞ்சாயத்து ராஜ்-ஐ நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த சட்டம் அறிமுகப்படுத்த நாள் நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டின் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்லா மாவட்டத்திற்குட்பட்ட ராம்நகர் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது, மத்திய அரசின் ராஷ்டரிய கிராம சுவராஜ் அபியான் திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, கிராம சுயராஜ்ஜியத்தை காந்தி எப்போதுமே வலியுறுத்தி வந்ததாக குறிப்பிட்டார். மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்துவதற்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கான செயல்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
கிராமப்புற வளர்ச்சியை பொருத்தமட்டில் நிதி ஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவமானது. ஆனால், கடந்த ஆண்டுகளில் இதில் பல குறைபாடுகள் இருந்தன.
ஆனால், ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி வெளிப்படையாகவும், உரிய முறையிலும் செலவழிக்கப்படுகிறதா? என்பதன் அவசியம் தொடர்பாக மக்கள் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்த மோடி, மகாத்மா காந்தி எப்போதுமே கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததாகவும், கிராமங்களுக்கு தன்னாட்சி உரிமை அளிக்கும் கிராம சுயராஜ்ஜியம் பற்றி வலியுறுத்தி பேசி வந்ததாகவும் குறிப்பிட்டார். #PMModi #RashtriyaGramSwarajAbhiyan #MadhyaPradesh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X