search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சிரோலி என்கவுண்டர் - மாவோயிஸ்ட் தரப்பில் உயிரிழப்பு 33 ஆக உயர்வு
    X

    கட்சிரோலி என்கவுண்டர் - மாவோயிஸ்ட் தரப்பில் உயிரிழப்பு 33 ஆக உயர்வு

    மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. #Gadchiroliencounter
    கட்சிரோலி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டம் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லையில் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அவர்களை ஒடுக்க சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வகையில் ஜிமல்கட்டா என்ற இடத்தில் உள்ள ராஜாராம் கண்ட்லா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே இரண்டு நாட்கள் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சண்டை முடிந்தபின்னர் நடந்த தேடுதல் வேட்டையில் நேற்று வரை 22 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன.

    இன்று காலையிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. அப்போது இந்திராவதி ஆற்றில் 11 பேரின் உடல்கள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. இதன்மூலம் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #Gadchiroliencounter
    Next Story
    ×